தொப்பியைத் தவிர வேறு ஒன்றும் அணியாமல் ஆடவர் ஒருவர் சாலையோரத்தில் நிர்வாணமாக நடந்து கொண்டிருந்தது கேமரா ஒன்றில் பதிவானது.
சாபாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள பெனாம்பாங் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது.
இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை. படத்திலுள்ள ஆடவர் உள்ளூர்வாசியா அல்லது சுற்றுப்பயணியா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
கிட்டத்தட்ட 32 டிகிரி செல்சியல் வெப்பநிலை கொண்டுள்ள சாபாவில் சூடு தாங்காமல் இவர் இதனைச் செய்திருக்கிறாரா? காரணத்தைக் கண்டறிய மும்முரத்துடன் முயல்கின்றனர் அந்நாட்டு போலிசார்.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட இந்தப் படம் இணையவாசிகளின் கிண்டலுக்கு இலக்கானது.