தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணைத் துணியால் கட்டிக்கொண்டு சிலர் கார் ஓட்டுவது போன்ற காட்சியைக் கண்ட பதின்ம வயது பெண் தானும் அவ்வாறு ஓட்டிப் பார்க்க விரும்பினார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரைச் சேர்ந்த அந்தப் பெண், ஒரு தொப்பியால் தனது கண்களை மறைத்துக்கொண்டு லாரியை ஓட்டினார்.
எதிரே வந்த கார் மீது அந்தப் பெண்ணின் லாரி மோதியது.
விளையாட்டு பெரும் விபரீதத்தில் முடிந்திருக்கும். ஆயினும், அதிர்ஷ்டவசமாக விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் பேராபத்தின் விளிம்பிலிருந்து தப்பினர். யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.
கவனக்குறைவுடன் ஓட்டியதாக அந்தப் பெண் குற்றஞ்சாட்டப்படுவார் என்று அந்நகர போலிசார் தெரிவித்தனர்.