சீனாவில் கனடிய ஆடவருக்கு மரண தண்டனை

பெய்ஜிங்/ஓட்டாவா: கனடிய ஆடவர் ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனைக் கண்டித்துள்ள கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனா கொடுங்கொன்மையான முறையில் மரண தண்டனையை தனது விருப்பத்திற்குப் பயன்படுத்துவதாகச் சாடினார்.

போதைப் பொருள் கடத்தலுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட ராபர்ட் லாய்ட் ஸ்கெல்லன்பர்க்கின் மேல்முறையீட்டு வழக்கை சீன நீதிமன்றம் மீண்டும் விசாரித்தபோது, முதலில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 15 ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பதிலாக மரண தண்டனை விதித்தது.

"சீனா இவ்வாறு சொந்த விருப்பத்திற்கு மரண தண்டனையை விதிப்பது கனடாவுக்கு மட்டுமின்றி, எங்களது அனைத்துலக பங்காளிகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் மிகவும் அக்கறைக்குரிய விவகாரமாக உள்ளது," என்று பிரதமர் ட்ரூடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் ஏற்கெனவே நிலவும் பதற்றம், இந்நிகழ்வால் மேலும் அதிகரித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சாவ் கனடாவில் கடந்த டிசம்பர் கைது செய்யப்பட்டதை அடுத்து, சீனா இரண்டு கனடியர்களைக் கைது செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!