ஆஸ்திரேலியாவில் குடியேறிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பை அந்நாட்டில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. குடியேறிகள் வரவேண்டும் என விரும்புவோரின் எண்ணிக்கை, 2010ஆம் ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.
ஆஸ்திரேலியாவில் இன்னும் அதிக குடியேறிகள் தேவைப்படுவதாக 30.4 விழுக்காட்டு ஆஸ்திரேலியர்கள் கருதுகின்றனர் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதம் 2010ஆம் ஆண்டில் 45.8% ஆக இருந்தது.
புதிய குடியேறிகள் வருவதை 32.8 விழுக்காட்டு ஆடவர்கள் ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. இது, 2010ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 53.4 விழுக்காட்டைக் காட்டிலும் வெகு குறைவு.
நகரங்களில் அதிக மக்கள் கூட்டமும் வீட்டு விலை அதிகரிப்பும் இந்நிலைக்கு முக்கிய காரணம் என்று ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர். வரும் மே மாதத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் குடியேற்றம் முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இடம்பெறும் என கருதப்படுகிறது.