மலாகா: ஸ்பெயினின் மலாகா மாநிலத்திலுள்ள கிராமப்புறத்தில் சுற்றுலாவுக்காக பெற்றோருடன் சென்றிருந்த இரண்டு வயது சிறுவன் திடீரென ஒரு கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். 100 மீட்டர் ஆழமான அந்தக் கிணற்றுக்குள் விழுந்துகொண்டிருந்த சிறுவனின் கதறலைக் கேட்ட அவனது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அந்தக் கதறல் சற்று நேரத்திற்குப் பிறகு நின்றுபோனது.
ஜூலன் என்ற அந்தச் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கிணற்றுக்குள் அதிகாரிகள் உணர்கருவிகளை இறக்கியபோது, அவன் விழுந்தபோது கையில் பிடித்துக்கொண்டிருந்த கிண்ணமும் மிட்டாய்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் சிறுவனோ காணவில்லை. அவனை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.