மன்னாரில் 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னாரில் 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

1 mins read
7ea15eff-59e4-4e10-83f8-0aea42cc6348
இதுவரை மன்னார் கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணியின்போது கிடைக்கப்பெற்ற 300க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது என்று அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

மன்னார்: மன்னாரில் ஒரே இடத் தில் புதைக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சாமிந்தா ராஜபக்‌‌ஷ தெரிவித்துள்ளார். இவற்றில் எலும்புக்கூடுகளின் ஆறு மாதிரிகள் இம்மாதம் 23ஆம் தேதி புளோரிடாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திற்கு 'ரேடியோ கார்பன்' பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும் என்றும் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார். அகழ்வுப் பணிகளின்போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளதாக அகழ்வுப் பணிக்குப் பொறுப்பு வகிக்கும் சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்‌‌ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் குறித்து ராஜபக்ஷ ஊடகங்களிடம் பேசியபோது, "மன்னார் நகரின் நுழைவுப் பகுதியில் அகழ்வுப் பணிகள் நேற்று 130வது நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றது.