சிட்னி: ஆஸ்திரேலியாவில் முன் எப்போதும் காணப்படாத அளவிற்கு வெயில் மக்களை வாட்டுகிறது. தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்பர்ன், அடிலெய்ட் ஆகிய முக்கிய நகரங்களில் இம்மாதத்தின் சராசரி தட்பவெப்பநிலை வழக்கத்திற்கு மேல் கணிசமாக உயர்ந்துள்ளது. அங்குள்ள சில சாலைகள் உருகும் அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளதால், வெப்பத்தைத் தணிக்க மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் குளியலில் ஈடுபட்டுள்ளன. கடற்கரை மற்றும் ஏரி பகுதிகளில் தங்கள் செல்ல பிராணிகளுடன் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்நிலையில், வெப்பம் 45 டிகிரி செல்சியசாக அதிகரிக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. <p>
ஆஸ்திரேலியாவில் மக்களை வாட்டும் கடும் வெயில்
1 mins read
சிட்னி கடற்கரையில் வெப்பத்தைத் தணிக்கும் மக்கள். படம்: இபிஏ -

