கிரைமியா கெர்ச் நீரிணையில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாக ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இதுவரை 14 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
எரிபொருட்கள் ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றப்படும்போது தீ மூண்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
டான்ஸேனியா கொடியைத் தாங்கிச் சென்றுகொண்டிருந்த அந்த இரண்டு கப்பல்களில் மொத்தம் 31 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேர் துருக்கியர்கள் என்றும் 15 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.