சிங்கப்பூரைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக மாணவர் திரு டேரியன் மோகன், மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுடன் விவாதம் செய்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் மகாதீருடன் தான் பேசிய விதத்தை 22 வயது திரு மோகன் தற்காத்துப் பேசினார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது. டாக்டர் மகாதீரை அவர் எதிர்கொண்ட விதம் சரியில்லை என்று சிலர் இணையத்தில் கூறியபோதும், பல்கலைக்கழகத்தின் விவாத மன்றத்தில் கருத்தரங்கு நடைபெறுவதால் இவ்வாறு பேசுவது அங்கு வழக்கம் என்று திரு மோகன் கூறினார்.
இவ்விருவருக்கும் இடையிலான கலந்துரையாடலைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக் பக்கத்தில் ஜனவரி 18ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.