பெய்ஜிங்: சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவையின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோவை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அங்கு அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பல அனைத்துலக நிறுவனங்களை ஏமாற்ற மெங் சதித் திட்டம் தீட்டியதாக அவர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளதைக் கனடா சுட்டியது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று கனடா அதிகாரிகள் மெங்கைக் கைது செய்தனர்.
அவர் தற்போது கனடாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மெங்கை நாடு கடத்த அமெரிக்கா முயன்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. "அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து எங்களது செயல்பாடு அமையும். அமெரிக்காவும் கனடாவும் அவை செய்துள்ள தவற்றை உணர்ந்து அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும்," என்று சீன வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
23 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2019 09:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!