தாய்லாந்து: மார்ச் 24ல் பொதுத் தேர்தல்

பேங்காக்: தாய்லாந்தில் வரும் மார்ச் 24ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் நடத்த தாய் லாந்து மன்னர் நேற்றுக் காலை ஆணை பிறப்பித்ததை அடுத்து பிற்பகலில் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.
இதன்மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.
அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓ சா ராணுவப் புரட்சி மூலம் பியூ தாய் கட்சியின் தலைமையிலான ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு, பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
முதலில் பிப்ரவரி 24ஆம் தேதி தேர்தல் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், மன்னர் மகா வஜிரலோங்கோன் முடிசூட்டு விழா தொடர்பான சில சடங்குகள் அந்தத் தேதியில் இடம்பெறக்கூடும் என அரசாங்கம் கூறியதை அடுத்து தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இவ்வாண்டு மே 4 முதல் 6ஆம் தேதி வரை மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும். 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டு விழா நடைபெறவிருப்பது இதுவே முதன்முறை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!