சோல்: கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் தனது போர்க் கப்பலுக்கு மேலே ஜப்பானிய சுற்றுக்காவல் விமானம் ஒன்று அச்சுறுத்தும் வகையில் பறந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஜப்பானின் இந்நடவடிக்கை நட்பு நாடான தன்னை ஆத்திரமூட்டும் செயல் என்றும் தென்கொரியா குறிப்பிட்டது.
"நட்பு, அண்டை நாட்டின் கப்பலுக்கு மேலாக ஜப்பானிய விமானம் தாழப் பறந்ததில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் எனச் சந்தேகப் படுகிறோம்," என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதன்தொடர்பில் ஜப்பான் தூதரகத்தில் உள்ள தற்காப்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருப்பதாகவும் தென்கொரியத் தற்காப்பு அமைச்சு கூறியது.
அதோடு, ஜப்பானின் இத்தகைய செயல் மீண்டும் தொடர்ந்தால் எங்களது ராணுவ நடத்தை விதிகளின் படி கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
தென்கொரியாவின் இந்த அறிவிப்பு குறித்து தான் அறிந்துள்ளதாகவும் இரு நாடுகளும் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம் என்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் கூறியதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோசில் இவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று சந்தித்துப் பேசினர்.
சீண்டிப்பார்க்கும் ஜப்பான்: தென்கொரியா குற்றச்சாட்டு
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!