சீண்டிப்பார்க்கும் ஜப்பான்: தென்கொரியா குற்றச்சாட்டு

சோல்: கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் தனது போர்க் கப்பலுக்கு மேலே ஜப்பானிய சுற்றுக்காவல் விமானம் ஒன்று அச்சுறுத்தும் வகையில் பறந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஜப்பானின் இந்நடவடிக்கை நட்பு நாடான தன்னை ஆத்திரமூட்டும் செயல் என்றும் தென்கொரியா குறிப்பிட்டது.
"நட்பு, அண்டை நாட்டின் கப்பலுக்கு மேலாக ஜப்பானிய விமானம் தாழப் பறந்ததில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் எனச் சந்தேகப் படுகிறோம்," என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதன்தொடர்பில் ஜப்பான் தூதரகத்தில் உள்ள தற்காப்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு புகார் அளித்து இருப்பதாகவும் தென்கொரியத் தற்காப்பு அமைச்சு கூறியது.
அதோடு, ஜப்பானின் இத்தகைய செயல் மீண்டும் தொடர்ந்தால் எங்களது ராணுவ நடத்தை விதிகளின் படி கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது.
தென்கொரியாவின் இந்த அறிவிப்பு குறித்து தான் அறிந்துள்ளதாகவும் இரு நாடுகளும் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியம் என்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளர் கூறியதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் டாவோசில் இவ்விரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று சந்தித்துப் பேசினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!