மலேசியாவின் புதிய மாமன்னராக முடிசூடும் பாகாங் சுல்தான்

கோலாலம்பூர்: மலேசியாவின் பாகாங் மாநில சுல்தான் மலேசியாவின் புதிய மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில ஆட்சியாளர் மாநாடு இன்று காலை கூடி சுல்தான் அப்துல்லா ரியாயட்டுடினை மன்னராக நியமித்ததாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவின் மாமன்னராக இருந்த கிளந்தான் சுல்தான் பதவி விலகியதை அடுத்து சுல்தான் அப்துல்லா இந்தப் பதவியை ஏற்கிறார். பேராக்கின் மன்னரான சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மாமன்னராகப் பணியாற்றுவார் என்று மலேசியாவின் தேசிய அரண்மனை தெரிவித்தது. மலேசியாவின் ஒன்பது மன்னர்களில் எட்டு மன்னர்கள் இன்று காலை நடந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். கிளந்தானின் சுல்தான் ஐந்தாம் முகம்மது இதற்கு வரவில்லை.

அரசமைப்புச் சட்டப்படி மன்னராட்சியைக் கொண்ட மலேசியாவில் மாமன்னர் பதவி ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளும் மாநில மன்னர்களிடையே கை மாறும். இந்த முறையின்கீழ் கிளந்தான் சுல்தானுக்கு அடுத்து மாமன்னர் பதவியை பாகாங்கின் சுல்தான் ஏற்கவேண்டும்.

விளையாட்டு வீரரான சுல்தான் அப்துல்லா, பல்வேறு விளையாட்டு அமைப்புகளில் பதவி வகித்திருக்கிறார். அவர் ஃபிஃபா அனைத்துலக காற்பந்து மன்றத்தின் உறுப்பினராகவும் ஆசிய ஹாக்கி சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!