சவூதி செய்தியாளர் கஷோகி கொலை; ஐ.நா நிபுணர் தலைமையில் விசாரணை

விருப்பத்தின் பேரில் அல்லது சட்டத்துறை கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு விதிக்கப்படும் மரண தண்டனையை ஆராயும் ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த நிபுணர் ஒருவர், சவூதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்த விசாரணையை வழிநடத்த துருக்கிக்குச் செல்வதாக ராய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

'ஷாங்கிடன் போஸ்ட்' பத்திரிகை செய்தியாளரான கஷோகி, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் சல்மானின் நீண்டகால விமர்சகராகவும் இருந்தார். அக்டோபர் 2-ஆம் தேதி துருக்கியின் தலைநகர் இஸ்டான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை அனைத்துலக நாடுகள் கடுமையாகக் கண்டித்தபோதும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இது குறித்து அதிக அக்கறைப்படவில்லை என்ற கவலைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அனைத்துலக விசாரணை தேவைப்படும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெல்வட் கவுசொக்லு தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளுக்கு துருக்கிய அதிபர் ரெசப் தயிப் எர்துவான் உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!