உயர்மாடி கட்டடத்தில் வெடிப்பு; ஒருவர் மரணம்

உயர்மாடி கட்டடத்தில் வெடிப்பு; ஒருவர் மரணம்

1 mins read
8cb7af3a-c085-4937-8a7e-01569eb6721a
'வாண்டா பிளாசா' கட்டடத்தில் வெடிப்புச் சம்பவம். (படம்: யூட்டியூப்) -

வடமேற்கு சீனாவிலுள்ள சாங்சுன் நகரில் உயர் மாடிக் கட்டடம் ஒன்றில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'வாண்டா பிளாசா' என்ற அந்தக் கட்டடத்தில் இந்த வெடிப்பு அந்நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3.20 மணிக்கு நிகழ்ந்ததாக நகர அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் கண்டறியவில்லை. சம்பவம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.