நண்பரின் சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய ஆடவர் கைது

நண்பரைக் கொலை செய்து அவரது சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டியதாகச் சந்தேகிக்கப்படும் தென்கொரிய ஆடவர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

கிம் சாங் ஹுன், சக தென்கொரியரான சோய் மியோங் ஹூன்னின் உடற்பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசி எறிந்ததாக போலிசார் கூறினர். பின்னர் சம்பவ இடத்தைவிட்டு தப்ப முயன்ற கிம், சந்தனாபுரி நகரின் முவாங் மாவட்டத்தில் பிடிபட்டார். கிம்மைப் பற்றி ஹோங் ஜுன் கிம் என்ற ஆடவர் தகவல் அளித்ததாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன. ஹோங்கும் தென்கொரியர்.

சோயைக் கத்தியால் குத்திக் கொன்ற பிறகு, அவரது சடலத்தைப் பல்வேறு பாகங்களாக வெட்டுவதற்கு உதவி செய்யச்சொல்லி கிம் தன்னை மிரட்டியதாக ஹோங் கூறினார். சோயின் தலை, ஒரு கை, ஒரு கால் ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை.

இந்த மூன்று கொரிய ஆடவர்களும் சூதாட்ட நடவடிக்கைகளுக்காக தாய்லாந்தில் தங்கியிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!