வெயில், மின்தடை, புதர்த் தீ: அவதிப்படும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 45 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வரும் நிலையில் நேற்று மின்சாரமும் தடைபட்டதால் விக்டோரியாவில் கிட்டத்தட்ட 200,000 பேர் புழுக்கத்தில் தவிக்க நேரிட்டது. விக்டோரியா முழுவதும் மின்தடை காரணமாக இருளில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக தேசிய எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்தது. இதனிடையே, தாஸ்மானியாவில் கொழுந்துவிட்டு எரியும் புதர்த் தீயை அணைக்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். நேற்று மட்டும் அங்கு எட்டுவிதமான தீ அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் உயர்ந்ததால் அடிலெய்டில் உள்ள 'ரெட் லயன்' ஹோட்டல் இலவசமாக பீர் வழங்கியதால் வெயிலைப் பொருட்படுத்தாது மக்கள் அந்த ஹோட்டலை நோக்கி படையெடுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!