தென் பிலிப்பீன்ஸ் தேவாலய வெடிப்பு; குறைந்தது எழுவர் மரணம்

தென் பிலிப்பீன்சின் ஜோலோ தீவிலுள்ள தேவாலயத்தில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் இன்று காலை நிகழ்ந்ததில் குறைந்தது எழுவர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளர்ச்சி அமைப்புகள் தளம் கொண்டுள்ள அந்தப் பகுதியில், முஸ்லிம்களுக்கென புதிய தன்னாட்சி வட்டாரத்தை அமைப்பதற்கான வாக்கெடுப்பு முடிந்து சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்ததாக பிலிப்பீன்ஸ் ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஜோலோ தீவிலுள்ள கத்தோலிக தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்ற வேளையில் முதல் வெடிப்பு நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக வட்டார ராணுவ பேச்சாளர் 'லெஃப்டினன்ட் கர்னல்' ஜெர்ரி பேசானா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் ஐந்து காவல்துறையினரும் பொதுமக்கள் இருவரும் உயிரிழந்ததுடன் 35 பேர் காயமடைந்ததாகவும் அவர் சொன்னார்.

முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பங்சாமொரொ வட்டாரத்தைத் தன்னாட்சி வட்டாரமாக அறிவிப்பது குறித்த வாக்கெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. அந்த வட்டாரத்தில் ஜோலோ தீவு உள்ளது. பல்லாண்டுகளாக நீடித்துவரும் பூசலால் நிலைகுலைந்த அந்தத் தீவு மக்களின் வாழ்க்கையைப் புதிய தன்னாட்சி வட்டாரம் மேம்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!