மணிலா: பிலிப்பீன்சில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சூலு என்ற மாநிலத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் வழிபாட்டு நேரத்தின்போது அரங்கேற்றப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஒருசில மணி நேரம் கழித்து அந்த அமைப்பின் 'அமாக்' எனும் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
அதன் பின்னர் ஐஎஸ் அமைப்பு அதன் சொந்த அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
தற்கொலைப்படைத் தாக்குதல்காரர்கள் இருவர் குண்டுகளை வெடிக்கச் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டது.
தேவாலயத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது முதல் குண்டு வெடித்தது. சம்பவ இடத்துக்குப் பாதுகாப்புப் படையினர் விரைந்தபோது இரண்டாவது குண்டு தேவாலயத்திற்கு வெளியில் வெடித்தது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ராணுவ அதிகாரிகள் உட்பட 20க்கும் அதிகமானோர் மாண்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிலிப்பீன்ஸ் தேவாலயத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு
29 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jan 2019 09:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!