ஊழலை ஒழிக்க மலேசியாவில் ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகம்

மலேசியாவை இன்னும் ஐந்தாண் டுகளில் லஞ்ச ஊழலற்ற நாடாக ஆக்கும் நோக்கில் நேற்று முக் கியமான திட்டம் ஒன்று அங்கு அறிவிக்கப்பட்டது. அந்த தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தை பிர தமர் மகாதீர் முகம்மது தொடங்கி வைத்துள்ளார். இவ்வாண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் லஞ்ச ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்பது திட்டத் தின் குறிக்கோள்.
ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மே மாதத் தேர்தலின்போது வாக்குறுதி வழங்கிய பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் இந்தப் புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளதாகக் கூறப்படு கிறது.குறிப்பாக முன்னைய அர சாங்கத்தின் 1எம்டிபி முறைகேடு காரணமாக எட்டு மாதத்திற்கு முன்னர் பக்கத்தான் ஹரப்பானை மலேசிய மக்கள் ஆட்சிப் பொறுப் பில் அமர வைத்தனர்.
திட்டத்தை நேற்று தொடங்கி வைத்த டாக்டர் மகாதீர், முக்கிய துறைகளில் நியமனங்கள் செய்யப் படும் விதத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் என்று கூறினார். மேலும், அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அரசியல்வாதிகளும் உயர்மட்ட அரசாங்கப் பணியாளர்களும் தங் களது சொத்து விவரங்களை அறிவிக்கக் கேட்டுக்கொள்ளப் படுவார்கள் என்றும் அவர் தெரி வித்தார்.
இந்தப் புதிய திட்டத்தின் நோக் கம் நாட்டிலிருந்து ஊழலை ஒழிப் பதுதானேயொழிய ஏற்கெனவே தவறு செய்தவர்களைத் தண்டிப்பது அல்லது என்று டாக்டர் மகாதீர் தெளிவுபடுத்தினார்.
"2018 மே 9 தேர்தலுக்கு முன்பு வரை நாட்டில் அரசாங்கம் தொடர் பான ஊழல் விவகாரம் பரந்து விரிந்து இருந்ததால் ஏராளமான மலேசியர்கள் பாதிக்கப்பட்டார்கள். அத்துடன் மலேசியா ஊழல் அர சியல் மலிந்த நாடு என்று உலகள வில் வெட்கக்கேடான முத்திரை குத்தப்பட்டது.
"இந்த அவப்பெயர் என்னாலோ எனது அரசாங்கத்தாலே உருவாக் கப்படவில்லை. இதற்கு முன்பு இங்கு ஆட்சி நடத்தியவர்கள் லஞ் சம், மோசடி, கறுப்புப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் போன்ற வற்றில் ஈடுபட்டதை வெளிநாட்டு அதிகாரிகள் கண்டறிந்த பின்னர் வெளிநாட்டு ஊடகங்கள் மலேசி யாவை இவ்வாறு விமர்சிக்கத் தொடங்கின," என்று பிரதமர் மகாதீர் தமது உரையில் குறிப்பிட் டார்.
மேலும், இதற்கு முன்னர் கடந்த 2004ஆம் ஆண்டு அப்துல்லா படாவி அரசாங்கத்தால் தொடங்கப் பட்ட 'தேசிய ஒருங்கிணைப்புத் திட்டம்' மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்துக்கு அதிக அதிகாரங் களை வழங்கியபோதிலும் ஊழல் கலாசாரத்தை அகற்ற அத்திட்டம் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது. படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!