சீனப் புத்தாண்டுக்காகப் பயணங்களை அதிகரிக்கும் ஏர்ஏஷியா

ஏர்ஏ‌ஷியா உள்ளிட்ட மூன்று மலேசிய விமான நிறுவனங்கள், ஜனவரி 30க்கும் பிப்ரவரி 12க்கும் இடையில் தங்களது மலிவுக் கட்டணப் பயணங்களை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தொனி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

குறிப்பிட்ட 14 பயணப் பாதைகளில் பயணிகளுக்கான விமான இடங்களை ஏர்ஏ‌ஷியா, மலேசிய ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங்கள் அதிகரித்திருப்பதாகத் திரு சியூ கூறினார். இதற்கான கட்டணங்கள் கடந்தாண்டைக் காட்டிலும் 25 விழுக்காடு குறைவாக இருப்பதாகவும் லோக் கூறினார்.

இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் நிலவும் பதற்றநிலையாலும் மெதுவடைந்துவரும் உள்நாட்டுப் பொருளியலாலும் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பலர் தொலைதூர நாடுகளுக்குச் செல்லாமல் ஆசிய நாடுகளுக்கு அதிகம் செல்லலாம் என்று சீனப் பயண நிறுவனம் 'சிடிரிப்' தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு மில்லியன் சீனர்கள் வெளியூருக்குப் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!