புத்ராஜெயா: மலேசியாவில் அமைச்சர் ஒருவருக்குத் திருமணம் நடைபெறுவது என்பது மிக அபூர்வமாகவே நடைபெறும் ஒரு நிகழ்வாகும். அமைச்சர்களாக பொறுப்பு ஏற்பவர்கள் பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களாகவே இருப்பதே அதற்குக் காரணம். ஆனால், மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பதவியேற்ற பக்கத்தான் ஹரப்பான் அமைச்சரவையில் ஒருசில அமைச்சர்கள் திருமணம் ஆகாதவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். அவர்களில் ஒருவர் அமைச்சர் இயோ பீ யின். எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சரான இவர், இளமையானவர் என்பதோடு இன்னும் திருமணம் ஆகாதவர். இளையர் விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சாதிக், திருமணம் ஆகாத மற்றோர் அமைச் சராவார். குமாரி இயோ பீ யின்னின் திருமணம் எதிர்வரும் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் எனவும் அவரைக் கரம்பிடிக்கப் போகிறவர் 'ஐஓஐ புராப்பர்ட்டிஸ்' குழுமத்தின் தலைமை நிர்வாகி லீ இயோவ் செங் என்றும் மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் பல தோட்டங்களையும் சொத்துகளையும் கொண்டிருக்கும் ஐஓஐ குழுமம் பூச்சோங் வட்டாரத்தில் மிகப்பெரிய வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ள நிறுவன மாகும். இந்நிலையில் அமைச்சர் இயோ, தமது திருமணம் பற்றி இன்னும் அதிகாரபூர்வமாக அறி விக்கவில்லை. 36 வயதான குமாரி இயோவை கரம்பிடிக்கும் 40 வயதான திரு லீ, நாட்டிலுள்ள பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான லீ ஷின் செங்கின் மகனாவார். ஏற்கெனவே சமூக ஊடகங்களில் குமாரி இயோ தனது காதலருடன் இணைந்து இருக்கும் படங்கள் பகிரப்பட்டு இருக்கின் றன. ஜோகூர் மாநிலத்தின் மூவாரில் நேற்று தொகுதி உலா சென்ற அமைச்சர் இயோவிடம் திருமணம் குறித்து செய்தியாளர்கள் வின வினர். திருமணம் குறித்த வதந்திகளை அவர் மறுக்காவிட்டாலும், "எனக்கு அதைப் பற்றி தெரியாது. தனிப்பட்ட வாழ்க்கையில் வரும் நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை," என்று சிரித்தவாறு பதிலளித்தார்.
தமக்கு திருமணமா என்று சிரிக்கும் மலேசிய அமைச்சர்
2 mins read

