ஐந்து வாகன விபத்து; இருவர் பலி

மலேசியாவின் பாஹாங் மாநிலத்திலுள்ள பெக்காட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் அறுவர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்ததாக மாவட்ட போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாந்தானிலிருந்து செகாமாட்டிற்குச் சென்றுகொண்டிருந்த கார், பக்கத்துத் தடத்தில் எதிரே வந்துகொண்டிருந்த மற்றொரு காருடன் உரசியதைத் தொடர்ந்து, முதல் கார், அந்தத் தடத்திற்கு மாறி அவ்வழியே சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. பக்கத்துத் தடத்திற்குத் தள்ளப்பட்ட இரண்டாவது கார், அங்கு மற்றொரு காருடன் மோதியது.

இந்த விபத்தில் 51 வயது அப்துல் ஜமில் அப்துல் ரஹ்மானும் 11 மாத ஆண் குழந்தை முகம்மது கைரல் தகிஃப் முகம்மது ‌ஷுஐப்பும் மாண்டதாக போலிசார் உறுதி செய்தனர். சம்பவம் குறித்த போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!