புத்ராஜெயா: நாட்டின் நிலைத் தன்மை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று மலேசியர் களுக்கு நினைவூட்டியுள்ளார் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது.
சீனப் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவிக்க டாக்டர் மகாதீர் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் இக்கருத்துகளை அவர் வலியுறுத்தினார்.
பல்லின, பல சமய மக்கள் ஒன்றாக வாழும் நாடு மலேசியா என்றும் ஒரே மண்ணில் பல இனத்தவர்களின் கலாசாரத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் மலேசியர்களுக்குக் கிடைத் துள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் பல்லின மக்கள் தற்போது ஒற்றுமையாக, அமைதியுடன் வாழ்ந்து வருவதை டாக்டர் மகாதீர் சுட்டினார். ஆனால் இது தொடரும் என மலேசியர்கள் மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டில் நிலவி வரும் அமைதியையும் பல இனத்த வர்களிடையே உள்ள நல்லிணக் கத்தையும் சீர்குலைக்க சில கட்சிகள் முயன்று வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இத்தகையோரின் பேச்சைக் கேட்டு மலேசியர்கள் செயல்படக் கூடாது என்று டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்.
விழாக்காலங்களைப் பயன் படுத்தி குடும்பத்தினருடனான உறவுகளை மட்டுமின்றி நண்பர் கள், பிற மலேசியர்களுடனான நல்லுறவையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
அமைதி, நல்லிணக்கம் காக்க மகாதீர் வலியுறுத்து
5 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!