அமைதி, நல்லிணக்கம் காக்க மகாதீர் வலியுறுத்து

புத்ராஜெயா: நாட்டின் நிலைத் தன்மை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று மலேசியர் களுக்கு நினைவூட்டியுள்ளார் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது.
சீனப் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவிக்க டாக்டர் மகாதீர் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் இக்கருத்துகளை அவர் வலியுறுத்தினார்.
பல்லின, பல சமய மக்கள் ஒன்றாக வாழும் நாடு மலேசியா என்றும் ஒரே மண்ணில் பல இனத்தவர்களின் கலாசாரத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் மலேசியர்களுக்குக் கிடைத் துள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் பல்லின மக்கள் தற்போது ஒற்றுமையாக, அமைதியுடன் வாழ்ந்து வருவதை டாக்டர் மகாதீர் சுட்டினார். ஆனால் இது தொடரும் என மலேசியர்கள் மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டில் நிலவி வரும் அமைதியையும் பல இனத்த வர்களிடையே உள்ள நல்லிணக் கத்தையும் சீர்குலைக்க சில கட்சிகள் முயன்று வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இத்தகையோரின் பேச்சைக் கேட்டு மலேசியர்கள் செயல்படக் கூடாது என்று டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்.
விழாக்காலங்களைப் பயன் படுத்தி குடும்பத்தினருடனான உறவுகளை மட்டுமின்றி நண்பர் கள், பிற மலேசியர்களுடனான நல்லுறவையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!