அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் வியட்னாவில் சந்திக்கவுள்ளதாக 'பொலிடிகோ' என்ற அமெரிக்க செய்தி இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.
பிப்ரவரி 27, 28ஆம் தேதிகளில் இந்தச் சந்திப்பு நிகழும் என்று கூறப்படுகிறது.
திரு டிரம்ப் இந்தத் தகவலைத் தொலைக்காட்சி படைப்பாளர்களிடம் நேற்று வெளியிட்டிருக்கிறார். வியட்னாமில் எந்த நகரில் இச்சந்திப்பு நிகழும் என்பது உறுதி செய்யப்படவில்லை.