இடிந்து விழுந்த கட்டடம்; குறைந்தது இருவர் மரணம்

இஸ்தான்புல்: துருக்கியில் எட்டு மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இருவர் மரணமடைந்தனர். ஆறு பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அதைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படும் என்றும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கட்டடத்தில் 14 வீடுகள் இருந்ததாகவும் அவற்றில் மொத்தம் 43 பேர் குடியிருந்ததாகவும் பதிவேட்டில் குறிப்பிட்டிருந்ததாக இஸ்தான்புல் ஆளுநர் அலி யர்லிகாயா தெரிவித்தார். அந்தக் கட்டடத்தின் ஆக உயரத்தில் இருக்கும் மூன்று மாடிகள் அனுமதியின்றி கட்டப்பட்டவை என்று அவர் தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் துணிக் கடை ஒன்று உரிமம் இல்லாது செயல்பட்டு வந்ததாக ஆளுநர் கூறினார். இடிபாடுகளிலிருந்து குறைந்தது மூன்று பேரை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!