கம்போடிய சிறைகளில் 47 மலேசியர்கள்

மனிதர்களைக் கடத்தும் கும்பல் ஒன்றுக்கு இலக்காகிய 47 மலேசியர்கள், கம்போடியாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக 'த ஸ்டார்' என்ற மலேசிய நாளிதழ் தெரிவித்துள்ளது. அந்த மலேசியர்களில் 44 பேர் சராவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று சராவாக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு லேரி சுங் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் சட்டவிரோத இணையச் சூதாட்டத்தில் ஈடுபட்டதன் பேரில் கம்போடிய போலிசார் கைது செய்ததாகவும் உண்மையிலேயே அவர்கள் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் திரு சுங் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கம்போடியாவிலுள்ள மலேசிய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!