கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது அவரது மூன்று வங்கிக் கணக்குகளில் 47 மில்லியன் மலேசிய ரிங்கிட் பணம் கள்ளத்தனமாகச் சேர்க்கப் பட்டது தொடர்பான மூன்று குற் றச்சாட்டுகள் மீண்டும் சுமத்தப் பட்டுள்ளன.
அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அகமது முன்பாக தம் மீதான அந்தக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது திரு நஜிப் அவற்றை மறுத்தார்.
ஜாலான் ராஜா சுலானில் உள்ள அம்இஸ்லாமிக் வங்கியில் உள்ள திரு நஜிப்பின் மூன்று கணக்கு களில் அந்தப் பணம் செலுத்தப் பட்டதாகவும் 2014 ஜூலை 8ஆம் தேதி இந்தக் குற்றச் செயல்கள் நிகழ்ந்ததாகவும் குற்றப் பத்திரிகை கூறுகிறது.
இந்த மூன்று குற்றச்சாட்டு களிலும் தனிநபர் உறுதிப்பத்திரம் வழங்க திரு நஜிப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கில் அரசாங்கத் தரப்பில் திரு மனோஜ் குருப்பும் திரு நஜிப் சார்பில் வழக்கறிஞர் முகம்மது ஷஃபீ அப்துல்லாவும் முன்னிலையாகினர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் திரு நஜிப் மீது இதே மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இருப்பினும், தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் தலைமை யிலான அரசாங்கத் தரப்பு வழக் கறிஞர் குழு அளித்த விண்ணப் பத்தை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கஸாலி அந்த குற்றச் சாட்டுகளில் இருந்து திரு நஜிப்பை விடுவித்து இருந்தார்.
திரு நஜிப் சம்பந்தப்பட்ட அந்த மூன்று குற்றச்சாட்டுகள் மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த அரசாங்கத் தரப்பு விரும்ப வில்லை என்றும் அமர்வு நீதி மன்றத்தில் அவர் மீது மீண்டும் இதே குற்றச்சாட்டுகளைச் சுமத்த அனுமதிக்க வேண்டும் என்றும் திரு டோமி தாமஸ் அந்த விண் ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஊழல் மலிந்த அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி தொடர்பில் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை திரு நஜிப் எதிர்நோக்கியுள்ளார். கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற வையும் அவற்றுள் அடங்கும்.
ஆனாலும், தாம் எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்று திரு நஜிப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
நஜிப் மீது மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல்
9 Feb 2019 03:24

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!