ஜகார்த்தா: இந்தோனீசியாவின் வடசுலாவேசியில் உள்ள கரான்கேடாங் எரிமலையிலிருந்து குழம்பு வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக எரிமலை அருகில் உள்ள சாலைகளும் பாலங்களும் புதையுண்டன.
எரிமலை அடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வாழும் 500க்கும் மேற்பட்ட கிராமவாசி களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்தோனீசிய அதிகாரிகள் கவலை தெரி வித்துள்ளனர்.
மோசமான வானிலை மீட்புப் பணிக்குத் தடைக்கல்லாக அமைந்துவிட்டதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
இருப்பினும், கிராமவாசிகளை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற இலக்குடன் தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாக வடசுலாவேசியின் இயற்கைப் பேரிடர் நிவாரண அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.
வழிந்தோடும் எரிமலைக் குழம்பு சாலைகளைப் புதைத்து விட்டதால் கிராமங்களில் உள்ள வர்களால் சாலை வழியாக அப்பகுதியிலிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆபத்தை எதிர்நோக்கும் கிராமம் எரிமலையின் உச்சி யிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கப்பல் ஒன்றைப் பயன்படுத்தி கடல் வழியாகக் கிராமவாசிகளை அவ்விடத்திலிருந்து பத்திரமாக வெளியேற்ற அதிகாரிகள் தற்போது திட்டமிட்டு வருகின் றனர்.
ஆனால் கடல் கொந்தளிப்பு காரணமாகக் கப்பலால் துறை முகத்துக்கு அருகில்கூட செல்ல முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மீட்புப் பணிக்காக அதிகாரிகள் தயாராகி வரும் வேளையில், ஆபத்து நெருங்குகிறது என்று தெரிந்தும் அந்தக் கிராமத்தில் இருக்கும் சிலர் தங்கள் வீடுகளையும் கால்நடைகளையும் விட்டு வர மறுப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதால் இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து ஒரு வாரத்துக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வழிந்தோடும் எரிமலைக் குழம்பு: கிராமவாசிகளுக்கு ஆபத்து
10 Feb 2019 04:37

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சிண்டா உன்னத விருது விழா 2023

சிண்டா உன்னத விருது விழா 2023

சிங்கப்பூரில் தங்கத்தின் விலை சரிவு

புதுப்பொலிவுடன் காட்சிதருகிறது தேக்கா நிலையம். புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் முதல் தளம் இன்று திறப்பு.

உயரும் மின்சாரம், எரிவாயுக் கட்டணங்கள்.

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!