குற்றச்சாட்டுகளை மறுத்த கோத்தா திங்கி  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 

ஜோகூர்பாரு: கோத்தா திங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் இஸானுதின் முகம்மது ஹருன் தன் மீது சாட்டப்பட்ட இரு குற்றச் சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
அவர் 2013, 2014ஆம் ஆண்டு களில் ஓர் அச்சிடும் நிறுவனத்திடமிருந்து 50,000 ரிங்கிட் ரொக்கத்தையும் ஒரு துண்டு நிலத்தையும் லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலாவது குற்றச்சாட்டில், 2013 செப்டம்பர் 8ஆம் தேதி நூர் இஸானுதின் கூட்டரசு நில மேம்பாட்டு நிறுவனத்தில் (பெல்டாவில்) ஒரு இயக்குநராக இருந்தபோது கார்யா ஹிடாயா பெர்ஹாத் நிறுவனத்திடமிருந்து 50,000 ரிங்கிட் வாங்கினார் எனக் கூறப்பட்டது. அந்தப் பணம் அவருடைய வங்கிக் கணக்கில் போடப்பட்டதாக நீதிமன்றத் தகவல் கூறியது.
இரண்டாவது குற்றச்சாட்டின்படி அவர், அதே நிறுவனத்திடமிருந்து கோத்தா திங்கியில், 180,000 ரிங்கிட் மதிப்புள்ள 0.421 ஹெக்டர் நிலத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப் படுகிறது. பெல்டாவின் அச்சிடும் வேலைகளைச் செய்து கொடுக்கும் குத்தகையைப் பெறு வதற்காக அந்நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் 40,000 ரிங்கிட் பிணையில் நூர் இஸானுதினை விடுவித்தது. வழக்கு மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் விசானைக்கு வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!