ஐஎஸ் போராளிகளுடன் சிரியா படை கடும் சண்டை

டமாஸ்கஸ்: சிரியாவிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்ட அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா படை இறுதிக் கட்டத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஆனால் சிரியா படையை எதிர்த்து ஐஎஸ் போராளிகள் கடுமையாக சண்டையிட்டு வருவதாக எஸ்டிஎப் எனப்படும் சிரியா ஜனநாயகப் படையின் பேச்சாளர் முஸ்தபா பாலி கூறினார்.
இது தங்களின் இறுதிக் கட்டத் தாக்குதல் என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகள் ஐஎஸ் போராளிகள் வசம் இருந்தன. அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையின் ஆதரவுடன் சிரியா படை அண்மைய மாதங்களில் சிரியாவின் பல நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்டியடித்தது. தற்போது ஈராக்கின் எல்லையை ஒட்டிய சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய பகுதி மட்டுமே போராளிகள் வசம் உள்ளது.
அப்பகுதியிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்ட இறுதிக் கட்டத் தாக்குதலைத் தொடங் கியுள்ள சிரியா படையினரை எதிர்த்து போராளிகள் கடுமை யாக சண்டையிட்டு வருவதாகவும் இருப்பினும் போராளிகள் விரைவில் தோற்கடிக்கப்படுவர் என்றும் சிரியா படையின் பேச்சாளர் முஸ்தபா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!