சாபாவில் கால்பதிக்கும் பெர்சாத்து

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் பிரிபூமி பெர்சாத்து கட்சி சாபா மாநிலத்தில் கிளை பரப்புகிறது.
அம்னோ கட்சியின் முன்னாள் தலைவர்கள் பலர் பெர்சாத்து கட் சியில் இணைய விருப்பம் தெரி வித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.
அந்த மாநிலத்தில் சாபா மரபு டைமைக் கட்சிக்கு (வாரிசான்) உள்ள செல்வாக்கைக் கட்டுப் படுத்தும் நோக்கில் இல்லாமல், அக்கட்சியில் சேர விரும்பாத அம்னோ முன்னாள் உறுப்பினர் களுக்கு அடைக்கலம் தரவே அங்கு தமது கட்சி கால்பதிப்பதாக திரு மகாதீர் விளக்கமளித்தார்.
"சாபாவில் வாரிசான் கட்சி, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி யில் இல்லை. ஆனால், அங்கு பக்கத்தானைவிட வாரிசான் முன் னிலையில் இருக்கிறது. அதே நேரத்தில், மத்தியில் எங்களது கூட்டணியில் வாரிசான் இடம்பெற் றுள்ளது. அதன் சார்பில் மூன்று அமைச்சர்களும் இரண்டு துணை அமைச்சர்களும் உள்ளனர். இது மிகச் சிறந்த ஏற்பாடு," என்ற அவர், கட்சியில் சேர விரும்பு வோரின் பின்னணியைத் தீர ஆராய்வோம் என்றும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!