டிரம்ப்: வடகொரியாவை அவசரப்படுத்த விரும்பவில்லை

வடகொரியா தனது அணுவாயுத மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என தாம் விரும்பினாலும் அந்நாட்டை அவசரப்படுத்த விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் திரு டிரம்ப் இரண்டாவது முறையாகச் சந்திக்க உள்ளார். அந்தச் சந்திப்பு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியா ஆக அண்மையில் எந்த அணுவாயுதச் சோதனையையும் நடத்தவில்லை என்று திரு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இப்போது அணுவாயுதச் சோதனைகள் செய்யப்படவில்லை. அதனால் நான் வடகொரியாவை அவசரப்படுத்தவில்லை. சோதனைகள் நடந்தால் அது வேறு. முடிவில் வடகொரியா தனது அணுவாயுதங்களை முழுமையாகக் களையவேண்டும்," என்றும் அவர் கூறினார்.

அணுவாயுதக் களைவுக்குப் பிறகுதான் வடகொரியாவுடனான பொருளியல் சார்ந்த கலந்துரையாடல்கள் நிகழும் என்றார் திரு டிரம்ப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!