இஸ்லாமாபாத்: அமைதிக்கு வாய்ப்பு கொடுக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா தகுந்த ஆதாரங்களைத் தந்தால் அண்மையில் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் உயிரைப் பறித்த தற்கொலைத் தாக்குத லுக்குக் காரணமானவருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். இந்தத் தகவலை பாகிஸ்தானின் டான் நாளிதழ் தெரிவித்தது.
பதான் இனத்தைச் சேர்ந்தவர் உண்மையென்றால் தாக்கு தலுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இம்ரான் கானுக்குச் சவால் விட்டிருந்தார் பிரதமர் மோடி. பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றபோது ஏழ்மை, கல்வியின்மை ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட லாம் என்று தாம் அவரிடம் தெரி வித்ததாக மோடி நினைவுகூர்ந்தார். அதற்கு இணங்கிய இம்ரான் கான் தாம் பதான் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் என்றும் கூறியிருந்ததாக மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மண்ணைத் தளமாகக் கொண்டு புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா ஆதாரங்களைக் கொடுத் தால் பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு காணொளி மூலம் இம்ரான் கான் தெரி வித்திருந்தார்.
ஆதாரம் கொடுத்தால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்ரான் கான் கூறியிருப்பதைச் சாக்குப்போக்கு என்று இந்தியா சாடியுள்ளது.
"ஜெய்ஷ் இ முகம்மது பயங் கரவாத அமைப்பு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது என்றும் அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. இதுவே போதுமான ஆதாரமாகும். பாகிஸ்தான் உடனடியாக நடவடிக் கை எடுக்க இது ஒன்றே போதும்," என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இம்ரான் கான்: அமைதிக்கு வாய்ப்பு கொடுங்கள்
26 Feb 2019 08:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2019 08:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!