‘இசிஆர்எல் ரயில் பாதை கட்டுப்படியாக இருந்தால் தொடரலாம்’

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புப் பாதையைக் (இசிஆர்எல்) கட்டுவதற்கான செலவு மிக அதிகம் என்றும் அது மலேசியாவுக்குக் கட்டுப்படியாக இல்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவுக்கு இரண்டு தெரிவுகள் இருப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார். ரயில் திட்டத்திற்கான செலவு குறையவேண்டும் அல்லது அரசாங்கம் திட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என்று அவர் கூறினார். தற்போதைய செலவுக்கு மலேசியா 55 பில்லியன் ரிங்கிட் கடன் வாங்கவேண்டும் என்றும் அதனைத் திருப்பிக் கொடுக்க 30 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார்.

"கடனுக்கான வட்டியாலும் நாம் பாதிக்கப்படுவோம். வட்டியுடன் சேர்த்து நாங்கள் மொத்தமாக 140 பில்லியன் ரிங்கிட் திருப்பித் தரவேண்டும். ரயில் பாதையைக் கட்ட வேண்டாம் என்பது எங்களது தீர்மானம் அல்ல. ஆனால் அதனைக் கட்டுவதற்கு வேண்டிய நிதி எங்களிடம் இல்லை. 1எம்டிபி நிறுவனத்தின் கடன்களையும் நாங்கள் அடைக்க வேண்டியுள்ளது," என்றார் டாக்டர் மகாதீர்.

"கடன்களை மலையாய்க் குவித்திருந்த முன்னைய அரசாங்கம் இப்போது எப்படி அரசாங்கத்தை நடத்துவது என எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்துள்ளனர். ஆனால் அவர்களே முறையாக நாட்டை வழிநடத்தவில்லை," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!