சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்களிடம் திருடியவர் கைது

இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்பது திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை போலிசார் செனாயில் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை அதிகாலை 12.25 மணியளவில் அந்த 33 வயது நபரைப் பிடித்ததாக இஸ்கந்தர் புத்ரி போலிஸ் தலைவர் ஸுல்கைரி முக்தர் கூறினார். கோத்தா திங்கியில் மெக்கானிக்காக பணிபுரிவதாகக் கூறப்பட்ட அந்த ஆடவர், ஏற்கெனவே நான்கு குற்றங்கள் புரிந்தவர் என்பது தெரியவந்திருப்பதாக திரு முக்தர் கூறினார். கைதான நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.50 முதல் 7.15 மணிக்கு உள்ளாக மலேசியா- சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பில் ஒன்பது திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!