மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ப்ரீத்தி ரெட்டி (32) (படம்). இந்திய வம்சா வளியைச் சேர்ந்த இவர், பல் மருத் துவராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3ஆம் தேதி செயின்ட் லியோனார்ட்ஸ் என்ற இடத்தில் நடந்த பல் மருத்துவர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென் றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அந்நாட்டுக் காவல்துறையினர் தேடும் பணியை முடுக்கிவிட்டனர். கடைசியாக அவர் சிட்னியின் பரபரப்பான பகுதியான ஜார்ஜ் தெருவில் உள்ள மெக்டோனல்ஸ் உணவகத் தில் வரிசையில் காத்திருந்தது கண்காணிப்புப் புகைப்படக் கருவி யில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே அவர் சென்ற கார், கிங்போர்டு பகுதியில் உள்ள ஸ்டரச்சன் லேன் என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
காருக்குள் ஒரு பெரிய கைப்பை இருந்தது. சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே பிரீத்தி ரெட்டியின் பிணம் இருந்தது.
இச்சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில், ஆஸ்திரேலிய காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.