வெனசுவேலாவின் அரசாங்கம் அமெரிக்க செய்தியாளர் ஒருவரைக் கைது செய்திருக்கிறது. கைதுக்கான காரணம் தெளிவாக இல்லை. வெனசுவேலிய அதிபர் நிக்கலஸ் மடுரோவைப் பதவியிலிருந்து விலக நெருக்குதல் கொடுக்கும் முயற்சியாக அமெரிக்கா அந்நாட்டின் வங்கிகளின் மீது வர்த்தகத் தடை விதித்திருக்கிறது.
இதற்கு முன்னர், தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக வெனசுவேலாவுக்கான ஜெர்மானிய தூதரை அதிபர் மடுரோ நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார்.
வெனசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை அந்நாட்டின் சட்டபூர்வ தலைவராகப் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கின்றன. கடந்தாண்டு பொதுத்தேர்தலில் மோசடி செய்து திரு மடுரோ மீண்டும் அதிபர் பதவியை ஏற்றதாக திரு குவைடோ குற்றம் சாட்டினார்.
அதிகளவு பணவீக்கம், உணவுத்தட்டுப்பாடு ஆகியவற்றால் வெனசுவேலா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.