நஜிப் ரசாக் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: 1எம்டிபியின் முன் னைய துணை நிறுவனம் தொடர் பிலான குற்றச்சாட்டை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மீதான விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதற்கு வளர்ப்பு நாய் காரணமாக இருந்துள்ளது.
மூவர் அடங்கிய மேல்முறை யீட்டு அமர்வு முன்பு பேசிய திரு நஜிப்பின் வழக்கறிஞர் முஹமட் ஷஃபி அப்துல்லா, இடதுகை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டுள்ளதால் தம்மால் வழக்கைத் தொடர முடியாது என்றார்.
"என்னுடைய வளர்ப்பு நாய் என் மீது பாய்ந்தது. இதனால் எனக்கு வலி ஏற்பட்டுள்ளது. ஊடுகதிர் சோதனைக்குப் பிறகு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்," என்று வழக்கறிஞர் சொன்னார்.
இதற்கு தலைமைச் சட்ட அதிகாரி டாமி தாமஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
"எல்லாரும் வழக்கை உடனே தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி யிருக்கின்றனர். எதிர்தரப்பு வழக்கறிஞரின் பிரச்சினை எங்களுக்குப் புரிகிறது. ஆனால் ஏன் இன்னமும் விசாரணை தொடங்கவில்லை என்ற கேள்வி யும் எழுகிறது," என்று திரு தாமஸ் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!