பாசிர் கூடாங் நெருக்கடியை நன்கு சமாளித்தனர்: மகாதீர்

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் பாருவின் பாசிர் கூடாங்கில் நச்சுவாயு பிரச்சினையைச் சமாளிப்பவர்கள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றனர் என்று மலேசிய பிரதமர் மகாதீர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சுங்கை கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட 2.43 டன் ரசாயனக் கழிவுகளின் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற சம்பவம் முதல்முறையாக நடந்தபோதிலும், இந்த நெருக்கடியைக் காவல்துறையினர், தீயணைப்பாளர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்ற அதிகாரிகள் நன்கு திறம்பட சமாளித்து வருகின்றனர் என்று மகாதீர் குறிப்பிட்டார்.

"பொதுமக்கள் இது கடுமையான நிலைமை எனக் கருதுகின்றனர். ஆனால் இதுபோன்ற நெருக்கடிகளைச் சமாளிக்க அதிகாரிகளுக்குத் திறமை உண்டு என்பதை மறந்திட வேண்டாம்," என்று வலியுறுத்தினார் மலேசிய பிரதமர்.

இந்தப் பிரச்சினை கட்டுக்குள் இருக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் அவசரநிலை அறிவிக்கத் தேவையில்லை என்றும் மகாதீர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!