பேங்காக்: தாய்லாந்து பொதுத் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு அளிப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது.
உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.
ஆனால் வாக்குப்பதிவு குறித்த எந்தவொரு முடிவும் நேற்று அறிவிக்கப்படவில்லை.
தாய்லாந்தில் பொதுத் தேர்தல் இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக சில பகுதிகளில் வாக்களிப்பு முன்கூட்டியே நடத் தப்படுகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் நூறு ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து வாக்களித்ததாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
2014ஆம் ஆண்டில் தாய் லந்தில் ராணுவ ஆட்சி நடப் புக்கு வந்த பின்னர் அங்கு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இது என்பதால் வாக்கா ளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக ஆணையம் கூறியது.
இந்தத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 380க்கும் அதிக மான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியிலிருந்து மதுபான விற்பனை மற்றும் விநியோகத்திற் கான 24 மணி நேரத் தடை உத்த ரவை தாய்லாந்து அரசு பிறப் பித்தது. தேர்தல் மோசடி தொடர் பான குற்றங்களைத் தவிர்க்க அத்தகைய தடை உத்தரவு கட்டாயம் தேவை என்று ஆணை யம் சொன்னது.
தாய்லாந்து பொதுத் தேர்தலுக்கு முன்கூட்டியே தொடங்கிய வாக்குப்பதிவு
18 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2019 09:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!