சுங்கை கிம் கிம் ஆற்றிலிருந்து 1,250 டன் கழிவு அகற்றப்பட்டது

சுங்கை கிம் கிம் ஆற்றிலிருந்து 1,250 டன் கழிவு அகற்றப்பட்டது

1 mins read
d30cce72-f5e7-4450-bade-fccd0a7771a3
பாதுகாப்பு உடையை அணிந்து சுங்கை கிம் கிம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் அவசரப்படை ஊழியர்கள். படம்: இபிஏ -

பாசிர் கூடாங்: மலேசியாவின் ஜோகூர் மாநில பாசிர் கூடாங்கில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றின் 1.3 கிலோ மீட்டர் பகுதி சுத்தப் படுத்தப்பட்டுள்ளதாக ஜோகூர் சுகாதார, சுற்றுச்சூழல், விவசாயத் துறை ஆட்சிக் குழுத் தலைவர் சஹ்ருடின் ஜமால் தெரிவித்தார். அங்கிருந்து அகற்றப்பட்ட 1,250 டன் கழிவில் 550 டன் மண்ணும் சேறும் 700 டன் மாசுபடித்த நீரும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நிலவரப்படி, சுல்தானா ஆமினா மற்றும் சுல்தான் இஸ்மாயில் மருத் துவமனைகளிலிருந்து 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக டாக்டர் சஹ்ருடின் தெரிவித்தார். இந்நிலையில், 143 பேர் இன்னும் மருத்துவமனைகளில் இருப்பதாகவும் 36 நோயாளிகள் ஜோகூர் பாருவுக்கு வெளியிலும் 29 பேர் ஜோகூர் மாநிலத்திற்கு வெளியில் உள்ள மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.