ஜக்கர்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை நேற்று உலுக்கிய 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததோடு 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் ஆவர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனீசியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படாவிட்டாலும் அது ஏற்படுத்திய நிலச்சரிவினால் பல வீடுகள் சேதமடைந்தன.
லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்
1 mins read

