கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி துப்பாக்கிகளை இணையத்தில் வாங்கினான்

நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிடிபட்ட பயங்கரவாதி, 'கன் சிட்டி' எனும் துப்பாக்கி விற்கும் இணையத்தளத்திலிருந்து துப்பாக்கிகளை வாங்கியதாக அந்தக் கடையின் உரிமையாளர் உறுதிசெய்துள்ளார்.

போலிஸ் வகுத்துள்ள முறையான அடையாளச் சோதனை மூலமே அந்த ஆடவருக்கு 'கன் சிட்டி' துப்பாக்கிகளை விற்றதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த டேவிட் டிப்பல் கூறியுள்ளார்.

நான்கு 'ஏ' பிரிவு ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த இந்தக் கோரச் சம்பவத்திற்குப் பின்னர் இன்று முதல்முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதில் தலையாயப் பணியாகத் துப்பாக்கிச் சட்டத்தைக் கடுமையாக்கப்போவதாகப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கடப்பாடு கொண்டுள்ளார்.

இந்தப் பயங்கரவாதச் சம்பவத்தில் இதுவரை 50 பேர் மரணமடைந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பிரென்டன் டர்ரன்ட் பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கியைக் கொண்டு அங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினான்.

கடந்த சனிக்கிழமை அவன் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

ஏப்ரல் ஐந்தாம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று போலிஸ் படை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!