ஓட்டுநர் தீவைத்த பேருந்தில் இருந்து காப்பாற்றப்பட்ட 51 இத்தாலிய மாணவர்கள்

ரோம்: இத்தாலியில் பள்ளிப் பேருந்து ஓட்டுநரால் பிணை பிடித்துவைக்கப்பட்டிருந்த 51 மாணவர்களை இத்தாலிய போலி சார் நேற்று முன்தினம் காப்பாற் றினர்.
மாணவர்களைப் பிணை பிடித்துவைத்ததுடன் அவர்கள் இருந்த பேருந்திலும் அவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி னான்.
ஆப்பிரிக்க நாடான செனகலில் பிறந்து 2004ஆம் ஆண்டில் இத்தாலிய குடிமகனானான் அந்த 47 வயது ஓட்டுநர்.
மத்திய தரைக்கடலில் குடியே றிகள் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாக அவன் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
30 நிமிடங்களுக்கு நீடித்த அந்தச் சம்பவத்தின்போது சில மாணவர்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் மாணவர் களுக்குப் பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை போலிசார் உறுதிசெய்தனர்.
போலிஸ் அதிகாரிகள் சரியான நேரத்திற்குச் சென்று உதவ வில்லையென்றால் அது விபரீ தத்தில் முடிந்திருக்கலாம் என மிலானின் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் ஃபிரான்சிஸ்கோ கிரெக்கோ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!