தமது தேர்தல் பிரசாரத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்பு உண்டு எனும் சந்தேகத்தின்பேரில் நடத்தப்படும் விசாரணை 'துரோகத்துக்குச்' சமமானது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 'ஃபாக்ஸ் நியூஸ்' சேனலில் பேசிய திரு டிரம்ப், தாம் ரஷ்யாவுடன் கூட்டாக இணைந்து செயல்பட்டுள்ளதாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரணையில் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். எனினும் விசாரணை காலம் தமக்கு மிகுந்த 'இருட்டான ஒரு காலகட்டம்' என்று அவர் கூறினார்.
"இதுபோன்ற ஒரு துரோகம் இன்னொரு அதிபருக்கு நடக்கக்கூடாது. இது நமது அரசை, நமது நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோதமான முயற்சி," என்றும் அவர் வர்ணித்தார்.