பங்ளாதேஷ் கட்டட தீ விபத்தில் 19 பேர் பலி

பங்ளாதேஷ் கட்டட தீ விபத்தில் 19 பேர் பலி

1 mins read
9f969d29-0c4e-45d0-a020-b70bf2c7a26f
-

பங்ளாதேஷ் தலைநகரில் எரியும் உயர்மாடிக் கட்டடத்திலிருந்து ஒருவர் கீழே குதித்துத் தப்பிக்க முயற்சி செய்கிறார். இவர், உயிர் பிழைத்தாரா என்பது தெரியவில்லை. இவரைப்போல மேலும் ஐவர் கீழே குதித்தனர். டாக்காவில் உள்ள பனானி பகுதியில் உள்ள 'எஃப்ஆர்' எனும் கட்டடத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19ஐத் தொட்டு உள்ளது. எழுபதுக்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். பலர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. பல மணி நேர போரட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.