கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திற்கான முதல மைச்சரை நியமிக்கும் அதிகாரம் தேர்தலில் வென்ற கட்சியினருக்கே உண்டு, அந்த மாநிலத்தின் மன்னருக்கு இல்லை என்று அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது நேற்று தெரிவித்தார்.
ஜோகூருக்கான புதிய முதலமைச்சரை நியமிப்பதில் சற்று காலதாமதம் ஆகலாம்.
இருப்பினும் கூடிய விரைவில் முதலமைச்சரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டுள்ளன என்றார் பிரதமர் மகாதீர்.
ஜோகூருக்கான முதலமைச்சர் அல்லது இடைக்கால முதலமைச் சரை ஜோகூர் மன்னர் முடிவு செய்வாரா என்று செய்தியாளர்கள் பிரதமர் மகாதீரிடம் கேட்டதற்கு, "இது அரசியல் ரீதியாக எடுக்கப் படும் முடிவு" என்று பதிலளித்தார். முதலமைச்சராக யார் நியமிக்கப் படவுள்ளார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் வழக்கறிஞர் அகமது சோல்ஹின் அப்துல் கனி என்பவர் பிரதமர் மகாதீர் கருத் துக்கு முரண்பட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். ஜோகூருக்கான முதலமைச்சரை நியமிப்பதற்கு 1895 ஆண்டு சட்ட விதிகளின்படி ஜோகூர் அரசருக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இதுநாள் வரை அமைதி காத்த ஜோகூர் சுல்தான் இப்ராகிம், இதுகுறித்து கருத்து ரைக்கையில், அரசியல் குறித்து தேவையில்லாமல் கருத்து கூறும் சிலர், அதைத் தவிர்த்து நாட்டை நல்லவிதமாக கவனிப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமென்று கூறியுள்ளார். வெளிநாட்டுக்குச் சென்றுள்ள ஜோகூர் மன்னர், "மக்களுக்கான சிறந்த முடிவை நேரம் வரும்போது நான் எடுப் பேன்," என்று ஜோகூர் மன்னர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள் ளார்.
ஜோகூர் முதலமைச்சர் ஒஸ் மான் சப்பியான் தனது முதல மைச்சர் பதவியைத் துறந்தார்.
அவருக்குப் பதிலாக முதல மைச்சர் பதவிக்கு வரவேண்டியவர் பெர்சத்து கட்சியில் இருந்து வரவேண்டும் என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.
முதலமைச்சரை மன்னரால் நியமிக்க முடியாது - மலேசிய பிரதமர் மகாதீர்
11 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2019 10:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!