1எம்டிபி வழக்கு: நீதிமன்றத்தில் நஜிப் முன்னிலை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 1எம்டிபி நிதி மோசடி வழக்கு தொடர்பில் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக முன்னிலையானார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தை அடைந்த திரு நஜிப், அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களைக் கண்டும் காணாமலும் நீதிமன்ற அறைக்குள் சென்றார்.

பல்வேறு ஒத்திவைப்புகளுக்குப் பிறகு 65 வயது திரு நஜிப்பின் நீதிமன்ற விசாரணை இம்மாதம் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஏழு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திரு நஜிப் மறுத்தார்.

1எம்டிபி நிறுவனத்திலிருந்து பல பில்லியன் டாலர் கொள்ளையடித்து, சொகுசு பொருட்களை வாங்குவதற்குச் செலவு செய்ததாகத் திரு நஜிப்பும் அவருக்கு நெருங்கியவர்கள் சிலரும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவர, திரு நஜிப்பின் தலைமையிலான அரசாங்கம் கடந்தாண்டு படுதோல்வி கண்டது. தேசிய முன்னணிக்கு இதுவரை ஏற்பட்டிராத தோல்வி திரு நஜிப்பின் தலைமையில் முதன்முறையாக ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திரு நஜிப் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!