சிட்னி: ஆஸ்திரேலியாவில் இதுவரை நடக்காத அதிசயமாக மான் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார் என்று ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்தது.
விக்டோரியாவில் உள்ள தனது வீட்டில் வளர்த்து வரும் மானுக்கு 47 வயது நபர் உணவு கொடுக்க சென்றபோது மான் அவரை தாக்கியது. கணவரைக் காப்பாற்ற அங்கு ஓடி வந்த பெண் ணையும் மான் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பெண் உயிருக்குப் போராடி வருகிறார்.
அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் 2000-2013 இடையே விலங்குகளால் கொல்லப்பட்டவர்களில் இதுவரை மான் தொடர்பான சம்பவங்கள் நடந்ததில்லை என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மெல்பர்னின் வடகிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சம்பவம் நடைபெற்ற இடத்தில் தாக்கிய மான் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறினர்.
ஆறு ஆண்டுகளாக தம்பதியர் அந்த மானை வளர்த்து வந்தததாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் மான் தாக்கி ஒருவர் பலி
18 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2019 09:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!